கெல்லி என்னும் கிறிஸ்துமஸ் கம்பளிப் புழு
பெத்லஹம் என்னும் ஊரில் கெல்லி என அழைக்கப்படும் ஒரு கம்பளிப்பூச்சி வசித்து வந்தது. அவன் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முயலும் ஒரு நல்ல கம்பளிப்பூச்சி தான். இருந்தாலும் இது அவனுக்கு கடினமாக இருந்தது, ஏனென்றால் அவன் அடிக்கடி தவறான தேர்வுகள் செய்து மாட்டிக்கொள்கிறான்.
ஒரு நாள், சாப்பிட உணவைத் தேடி போகும் போது, இந்த குட்டி கம்பளிப்பூச்சி ஒரு மலை மேல் ஏற முடிவு செய்தது. மலையின் மேல் வந்த போது, பல பாறைகள் கொண்ட ஒரு பெரிய குகை ஒன்றை கண்டான். என்ன தான் இருக்கு என பார்க்க கெல்லி ஆர்வமானான். ஒரு இருண்ட குகையில் ஏறுவது சரியான யோசனையாக படவில்லை, இருந்தாலும் நுழைய முடிவு செய்தான்.
குகையின் உள்ளே சென்றவுடன், கெல்லிக்கு மிக குளிராகவும் தனிமையாகவும் இருந்தது. இவ்வளவு இருட்டான மற்றும் தனியான ஒரு இடத்தில் இதுவரை இருந்ததில்லை என்பதால் அவன் பதட்டமாக இருந்தான்.உடனே, வெளியே திரும்பி செல்ல முடிவு செய்தான். துரதிருஷ்டவசமாக, அந்த குட்டி கம்பளிப்பூச்சி பாறைகள் மீது கீழே விழுந்ததால் வெளியே செல்லும் வழி தெரியாமல் தவித்தது. இடது பக்கம் திரும்பினேனா வலது பக்கமா? கெல்லிக்கு தெரியவில்லை.
நீண்ட நேரம் குகையிலேயே இருப்பது போல் தோன்றியதால், இனிமேல் வெளியே வரவே முடியாது என்று கெல்லி நினைத்தது. இருட்டில் தொலைந்தது போல் உணர்ந்தான் மற்றும் "நான் இந்த பயங்கரமான குகைக்கு வந்திருக்கவே கூடாது", என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். என்ன செய்வது என தெரியாது கெல்லி பயந்து கொண்டு இருந்தான்.
யாராலும் தன்னை கண்டுபிடிக்க முடியாதே என்று நினைத்து கெல்லி நம்பிக்கை இழக்க இருந்தான். அந்த நேரத்தில், கழுதைகள், மற்றும் பசுக்கள், ஆடுகள் சத்தங்கள் கேட்டன. இதுவரை தனியாக உணர்ந்த கெல்லியை இந்த சத்தங்கள் சந்தோஷப்படுத்தியது.
பெத்லஹமில் அது ஒரு குளிர்ந்த மற்றும் காற்றோட்டமான குளிர்கால இரவு என்பதால் மேய்ப்பர்கள் குகையின் உள்ளே விலங்குகளை கொண்டு வந்து தூங்க வைக்க முடிவெடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் மெழுகுவர்த்தியை கொண்டு நுழைந்த உடன் அது எவ்வளவு பெரிய குகை என்று கெல்லியால் பார்க்க முடிந்தது. பெரிய அறையில் விலங்குகளுக்கு சூடான படுக்கை விரிப்பாக வைக்கோல் கட்டுக்களை மேய்ப்பர்கள் அமைத்தனர். ஒரு நீண்ட நாள் அலைச்சலுக்கு பிறகு மற்ற மிருகங்களைப் போல், கம்பளிப்பூச்சிக்கும் தூக்கமாய் வந்தது. விரைவிலேயே அனைவரும் தூங்கிவிட்டனர்.
காலையில் மேய்ப்பர்கள் விலங்குகளை எழுப்பி குகையை விட்டு விரைவில் கிளம்பிவிட்டனர். கெல்லி கண்முழிப்பதற்குள் அவர்கள் ஏற்கனவே போய்விட்டனர். விலங்குகள் மற்றும் மேய்ப்பவர்கள் காலை சூரியனின் இதமான அரவணைப்பை அனுபவிக்க முன்னரே கிளம்பிவிட்டனர். "நான் இப்போது என்ன செய்ய போகிறேன் ?", என கெல்லி கூறியது. இந்த இடத்திலேயே தொலைந்தது போல் தனது வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டுமோ என்று நினைத்தது.
விரைவில் மனிதர்கள் குளிர்கால இரவில் இருந்து அடைக்கலம் பெற தங்கள் விலங்குகளோடு திரும்பினர். மற்றவர்கள் குகையில் இருப்பதால் கெல்லி சற்று உற்சாகம் அடைந்தான், ஆனால் அத்தகைய ஒரு பெரிய குகையை விட்டு போக முடியாது என்று தெரிந்து அழுதான். விலங்குகள் இங்கே இருந்தும் கூட, இந்த இருளிலிருந்து மனிதர்கள் மற்றும் விலங்குகளை பின்பற்ற அவனது கால்கள் மிகவும் சிறியதாக இருந்தன.
கெல்லி தனக்குத் தானே வருந்திக் கொண்டிருக்கும் போது, ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்தது. ஜோசப் என்பவன் குகையில் நுழைந்தான். அவன் வைக்கோல் படுக்கையை தயார் செய்யத் தொடங்கினான், ஆனால் இது விலங்குகளுக்கு அல்ல. இந்த படுக்கை அவனுடைய மனைவி மேரிக்கு. அவள் குழந்தையுடன் படுக்க இதை தயார் செய்தான்.
இயேசு என பெயரிட்ட தனது பச்சிலம் ஆண் குழந்தையை மேரி வைத்திருப்பதை கம்பளிப்பூச்சி ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தது. இந்த குழந்தை ஒளி மற்றும் அன்பால் நிரம்பி இருந்தது. கெல்லி இயேசுவை பார்த்த போது, முன்பிருந்த தனிமையும் பயமும் போய்விட்டது.
அன்றிரவே, மற்ற மேய்ப்பர்கள் குகைக்கு வந்து குழந்தை இயேசுவிற்கு பாடல்கள் பாட தொடங்கினர். இருட்டாய் இருந்த குகை, இப்போது எல்லோரும் அமைதியும் மகிழ்ச்சியும் உணரும் விதமாக ஒரு ஒளி நிரம்பப்பட்டு ஜொலித்தது. விரைவில், ஒரு பிரகாசமான நட்சத்திரத்தை பின்பற்றி வந்த மூன்று ஞானிகள், குழந்தை இயேசுவிற்கு தங்கள் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்க வந்தனர். அவர்கள் குழந்தை இயேசுவிற்கு தங்கம், குங்கிலியம் சாம்பிராணி மற்றும் சிவபோளம் போன்ற நறுமண பொருட்களை வழங்கினர்.
தன்னை பார்க்க வந்த அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தரும் இந்த குழந்தை கண்டு கெல்லிக்கு ஆச்சரியமும் பிரமிப்பு நிறைந்து இருந்தது. எனினும் குழந்தை இயேசுவிற்கு வழங்க ஒரு பரிசு இல்லையே என்று வருத்தமாக இருந்தது. "நான் இந்த குகையின் உள்ளே தொலைந்து போன ஒரு தனிமையான கம்பளிப்பூச்சி, நமக்கு ஒளி கொடுத்திருக்கும் இந்த குழந்தைக்கு நம்மால் என்ன பரிசு கொடுக்க முடியும்?" என்று நினைத்தான். யோசித்து, யோசித்து அவன் இன்னும் கொஞ்சம் யோசித்தான்.
"எனக்கு தெரியும்!" கெல்லி கூறினான். இயேசுவிற்கு கொடுக்கவிருக்கும் பரிசு பற்றி உற்சாகமாக இருந்தான். அவன் ஒரு கிறிஸ்துமஸ் பரிசாக தன்னை சுற்றிக்கொள்ள முடிவுசெய்தான். அவர் கவனமாக ஒரு கூட்டை செய்து, அதன் உள்ளே தன்னை சுற்றிக்கொண்டான். அதை செய்யும் முழு நேரமும், இயேசுவிற்கு தனது பரிசை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை பற்றி மட்டுமே கெல்லி யோசித்து கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, கெல்லி கூட்டை விட்டு வெளியே வந்தான். அப்போதுதான் அவன் கிறிஸ்துமஸின் அதிசயத்தை கண்டறிந்தான். இனி அவன் ஒரு குகையின் உள்ளே சிக்கித் தொலைந்த ஒரு தனிமையான கம்பளிப்பூச்சி இல்லை. அவன் ஒரு புதிய படைப்பு, இதய வடிவ ஜோடி இறக்கைகள் கொண்ட ஒரு அற்புதமான ஒரு பட்டாம்பூச்சி.
கெல்லி இருளிலிருந்து வெளிச்சத்திற்கு பறந்து செல்லும் போது அவனது முகத்தில் புன்னகை இருந்தது. அவன் தான் சரியான தேர்வு செய்தேன் எனவும், இயேசுவிற்கு தனது பரிசு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் எனவும் அவன் அறிந்திருந்தான். ஒரு பட்டாம்பூச்சி காற்றில் பறப்பதை பார்க்கும் போதெல்லாம், இயேசு நமது இதயத்தை கொடுக்க நினைவுபடுத்துகிறார்.
முடிவு